;
Athirady Tamil News

புங்குடுதீவு பெருங்காட்டில் கரப்பந்தாட்ட போட்டித்தொடர்!! ( படங்கள் இணைப்பு )

0

புங்குடுதீவு பெருங்காடு சண்ஸ்ரார் விளையாட்டு கழகத்தினரால் கடந்த சனியன்று ஆண் , பெண் இருபாலாருக்குமான கரப்பந்தாட்ட போட்டிகள் சண்ஸ்ரார் கழக மைதானத்தில் நடாத்தப்பட்டன . ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் புங்குடுதீவு சென்சேவியர் கழகத்தினரும் புங்குடுதீவு பாரதி கழகத்தினரும் மோதிக்கொண்டனர் . மிகவும் பரபரப்பாக நடைபெற்றிருந்த இப்போட்டியில் 25 – 23 என்ற புள்ளிகள் அடிப்படையில் சென்சேவியர் கழகத்தினர் வெற்றிபெற்றிருந்தனர்.
பெண்களுக்கான இறுதிப்போட்டியில் புங்குடுதீவு அம்பாள் கழகத்தினரும் புங்குடுதீவு இறுப்பிட்டி ஐங்கரன் விளையாட்டு கழகத்தினரும் மோதிக்கொண்டவேளையில் அம்பாள் விளையாட்டு கழகத்தினர் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டனர்.

பரிசளிப்பு நிகழ்வில் புங்குடுதீவு உலக மையம் செயலாளர் கருணாகரன் குணாளன் , சண்ஸ்ரார் விளையாட்டு கழகத்தலைவர் நா. அழகேசன் மற்றும் அக்கழகத்தின் உறுப்பினர்களான சி.கலாநிதி , உ. பிரதாப் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.