;
Athirady Tamil News

மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்!!

0

கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கான புகையிரத சேவையை மீண்டும் ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்கவுள்ளதாக மஹவ – ஓமந்தை ரயில்வே திட்ட பணிப்பாளர் அசோக முனசிங்க தெரிவித்துள்ளார்.

புகையிரத பாதை திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு புகையிரத சேவைகள் கொழும்பிலிருந்து அநுராதபுரம் வரை மட்டுமே இடம்பெற்று வருகின்றன

இந்நிலையில், அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான ரயில் பாதையின் திருத்தப் பணிகளை அடுத்த மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை மீண்டும் புகையிரத சேவையை ஜூலை 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.