;
Athirady Tamil News

“M.F” ஊடாக, “ஞானாம்பிகை முன்பள்ளி” மழலைகளுக்கு, தேனுவின் பிறந்தநாள் பரிசு.. (வீடியோ படங்கள்)

0

“M.F” ஊடாக, “ஞானாம்பிகை முன்பள்ளி” மழலைகளுக்கு, தேனுவின் பிறந்தநாள் பரிசு.. (வீடியோ படங்கள்)
###################################

புங்கையூர் தோன்றல்களான சொக்கர் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களான லண்டனில் வசிக்கும் திரு.திருமதி பாபு மீரா தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி.தேனு, இன்றைய தனது பிறந்தநாளில் வழங்கிய “கற்றல் உபகரணங்கள்” வவுனியா வடக்கு பிரதேச புளியங்குளம் பரசங்குளத்தில் அமைந்துள்ள “ஞானாம்பிகை முன்பள்ளி” மாணவர்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வழங்கி வைக்கப்பட்டது.

முன்னதாக பரசங்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாகத்தினரால் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இன்றைய பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வி.தேனு அவர்களின் தந்தையான லண்டனில் வசிக்கும் திரு பாபு அவர்கள் தனது மகள் தேனுவின் பிறந்தநாளில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதியினை வழங்க உடனடியாக முன்வந்தார். அதனை செல்வி.தேனுவின் பிறந்தநாளில் குறித்த கிராமத்திற்கு சென்று மாணவர்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினர்” வழங்கி வைத்தனர்.

பரசங்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் ஞானாம்பிகை முன்பள்ளில் மிக நேர்த்தியாக ஒழுங்கு செய்யப்பட்ட தேனுவின் பிறந்தநாளில் முன்பள்ளி ஆசிரியைகளான திருமதி கிருஸ்ணவேணி, திருமதி.ஜெயபாணுவா மாதர் சங்கத் தலைவி திருமதி.சுபாசினி, உபதலைவர் திருமதி நிரோசா, உப செயலாளர் திருமதி உமா மற்றும் உறுப்பினரான மோகனா உட்பட மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதிகள் மாதர் சங்கத்தின் நிர்வாகத்திடம் ஒப்படைக்க முன்பள்ளி ஆசிரியையின் தலைமையில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு ஆசிரியை திருமதி கிருஸ்ணவேணி அவர்களினால் நன்றியுரையும் கூறப்பட்டது. இந்நிகழ்வில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” செயலாளர் திரு.மாணிக்கம் ஜெகன் அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஏற்பாடுகளை நெறிப்படுத்தி இருந்தார்.

இறுதியாக கற்றல் உபகரணங்கள் பெற்றுக் கொண்ட மாணவர்கள் சார்பாக ஆசிரியை திருமதி கிருஸ்ணவேணி அவர்களினால் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன், செல்வி.தேனு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டனர்.
செல்வி.தேனு அவர்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சார்பாகவும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

03.04.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/n

You might also like

Leave A Reply

Your email address will not be published.