;
Athirady Tamil News

கனடா “நம் தாயகம்” நிதிப்பங்களிப்பில் உலருணவுப் பொதிகள் வழங்கினார் சண்முகலிங்கம் ஐயா.. (படங்கள்)

0

கனடா “நம் தாயகம்” நிதிப்பங்களிப்பில் உலருணவுப் பொதிகள் வழங்கினார் சண்முகலிங்கம் ஐயா.. (படங்கள்)
################################

உலகமே கொரோனா தொற்று நோய் காரணமாக ஸ்தம்பித்த நிலையில் வழமையான நடவடிக்கைகளை நிறுத்தி அசாதாரண நிலை காணப்படும் நிலையில், தாயகத்தில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு ஒரு மாதகாலம் கடந்த பின் நாளாந்த கூலித் தொழிலாளர்கள் குடும்பங்கள் படும் துன்பங்களை எழுத்தில் சொல்ல முடியாது..

குழந்தைகள் உள்ள குடும்பங்கள், நோயாளிகள், வயோதிபக் குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், உழைப்பாளர்கள் இல்லாத குடும்பங்கள் என நீண்டு செல்லும் வறிய நிலையில் வாழும் குடும்பங்களின் நிலை பட்டினிச் சாவை எதிர்நோக்கும் ஆபத்தான சூழ்நிலை காணப்படுகிறது..

இதனை கருத்திற் கொண்டு கனடா “நம் தாயகம்” நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் உலருணவுப் பொதிகள் வவுனியா தவசிக்குளம் கிராமத்து குடும்பங்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது..

கனடா “நம் தாயகம்” நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், பிரபல சமூக,சமய ஆர்வலரும், புங்குடுதீவு பாணாவிடை சிவன் ஆலயத்தின் தலைவருமான முன்னாள் ஸ்ரீ கணேச மகாவித்தியாலய ஓய்வுபெற்ற அதிபருமான மதிப்பார்ந்த எஸ் கே சண்முகலிங்கம் ஐயா அவர்களின் விருப்பத்தின் அமைவாக தொழில் வாய்ப்பின்றி முடங்கிப் போயுள்ள நாளாந்த கூலித் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு பசிபோக்கும் முகமாக வவுனியா தவசிக்குளம் கிராமத்தில் வசிக்கும் விசேட தேவையுடைய குடும்ப பெண் தலைமைத்துவ குடும்பம் நாளாந்த வருமானம் இழந்த குடும்பம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குடும்பம் என பலதரப்பட்ட வகையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது..

மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இவ்வாறான உதவிகளை வழங்கிய கனடா “நம் தாயகம்” நிறுவனத்திற்கும் இந்நிதி மூலமாக பாதிக்கப்பட்ட தேவையுடைய கிராமத்திற்கு உதவி செய்யும்படி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்ட பெரியவர் எஸ் கே சண்முகலிங்கம் அதிபர் அவர்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சார்பிலும் தவசிக்குளம் கிராம மக்கள் சார்பிலும் நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

14.06.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.