;
Athirady Tamil News

இரண்டாம் கட்டமாக, சுவிஸ் ஈழதர்சன் பிறந்தநாளில் மேலும் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

0

இரண்டாம் கட்டமாக, சுவிஸ் ஈழதர்சன் பிறந்தநாளில் மேலும் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் சொலத்தூண் பிரதேசத்தில் வசிப்பவர்களுமான திரு.திருமதி செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்டபுத்திரன் செல்வன்.ஈழதர்சன் அவர்களின் இருபத்தைந்தாவது பிறந்தநாள் விழாவினை இன்றையதினம் தாயக உறவுகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

திரு.திருமதி செல்வபாலன் மனோகரி தம்பதிகள், தங்களின் குடும்பத்தின் பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக தாயக உறவுகளுக்கு கடந்த சில வருடங்களாக உதவி செய்து வருகின்றனர்.

அந்தவகையில் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக பலதரப்பட்ட சமூகப் பங்களிப்பினை தொடர்ந்து செய்து வருகின்ற திரு.திருமதி. செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன் செல்வன்.ஈழதர்சனின் இருபத்தைந்தாவது பிறந்த நாள் நிகழ்வினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பில் செல்வன்.ஈழதர்சன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்றையதினம் முதல் நிகழ்வாகக் வன்னி எல்லைக் கிராமமொன்றில் கேக் வெட்டி தாயக உறவுகளினால் கொண்டாடப்பட்டது.

அத்துடன் இன்றைய நாட்டின் பொருளாதார இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அந்நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்கள் சிலருக்கு அரிசிப் பொதிகளும், பயன்தரு தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே..

இதனைத் தொடர்ந்து நேற்றுமாலை இரண்டாவது நிகழ்வாக கிளிநொச்சிப் பிரதேச கனகாம்பிகைக்குளம் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் சுமார் இருபது குடும்பங்களுக்கு ஒரு தொகைப்பணம் வழங்கி வைக்கப்பட்டது.

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய செல்வன்.ஈழதர்சனின் தந்தை திரு.செல்வபாலன் புளொட் அமைப்பின் தோழர் என்பதினால் அவரது விருப்பத்துக்கு இணங்க புளொட் அமைப்பின் தென்மராட்சிப் பிரதேச சாவகச்சேரி முக்கியஸ்தர்களில் ஒருவரான தோழர்.விக்ரர் எனும் திரு.சிவகுமார் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க புளொட் அமைப்பின் கிளிநொச்ச்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர்.ராஜா எனும் திரு.மகேந்திரம் அவர்களும் கலந்து சிறப்பித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்றையதினம் மூன்றாவது நிகழ்வாக வவுனியா கூமாங்குளம் பிரதேச அம்பாள் முன்பள்ளியில் மாணவ,மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் அப்பிரதேச கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொள்ள, திரு.திருமதி செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்டபுத்திரன் செல்வன்.ஈழதர்சன் அவர்களின் இருபத்தைந்தாவது பிறந்தநாள் விழாவினை இன்றையதினம் தாயக உறவுகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

வவுனியா கூமாங்குளம் பிரதேச அம்பாள் முன்பள்ளி மாணவ, மாணவிகளுடன் அவர்களது பெற்றோர்கள், அக்கிராம மக்கள் எனப் பலரும் ஒன்றுகூடி இவரது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக்வெட்டி கொண்டாடினார்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது மட்டுமல்லாமல்,

இன்றைய நாட்டின் பொருளாதார இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இன்று பிறந்தநாள் காணும் செல்வன் ஈழதர்சனின் விருப்பத்துக்கு இணங்க கலந்து கொண்டவர்களில், வயோதிபர்கள், நோய்வாய்க்கு உள்படடோர், வறுமைக் கோட்டில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என தெரிவு செய்யப்பட்டோருக்கு வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் இன்று பிறந்தநாள் காணும் செல்வன் ஈழதர்சனின் விருப்பத்துக்கு இணங்க கலந்து கொண்டவர்களில், சிலருக்கு பயன்தரு தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

அதேவேளை தங்களது சிரேஷ்ட புதல்வன் செல்வன்.ஈழதர்சனின் இருபத்தைந்தாவது அகவை நாளில் வவுனியாவின் கூமாங்குளம் பிரதேசத்தில் உள்ள அம்பாள் முன்பள்ளி மாணவமாணவிகளுக்கான கற்றல் உபகரணங்களும், செல்வன்.ஈழதர்சனின் பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் வழங்கி வைக்கப்பட்ட்து குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வானது வவுனியாவின் கூமாங்குளம் பிரதேச அம்பாள் முன்பள்ளி ஆசிரியை திருமதி.பா.யோகானந்தி அவர்களின் ஒழுங்கமைப்பில், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன்,  “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.பவளராணி நவரெட்ணம் ஆகியோரின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில், கூமாங்குளம் பிரதேச சபை உறுப்பினர் திரு.மா. அதிஸ்டசெல்வம், கூமாங்குளம் விவசாய கூட்டுறவு பொருளாளர் திரு.மா.நடராஜா, மற்றும் நூலகர் திருமதி. சீதாலச்சுமி , ஆசிரியர் திருமதி.பா.யோகானந்தி ஆகியோர் கலந்து முன்னிலை வகித்து ஆசி கூறினார்கள்.

சுவிஸ் செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன் செல்வன்.ஈழதர்சன் அவர்களின் பிறந்த நாளில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக பலவேறு உதவிகள் தாயக உறவுகளுக்கு ஏற்கனவே வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே இன்றைய நாளிலும் பல்வேறு நிலைகளில் நலிவுற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு செல்வன்.ஈழதர்ஷனின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகள், பயன்தரு தென்னைமரக் கன்றுகள், முன்பள்ளி மாணவ மாணவிகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்ட்து எனவும்,  இவைகள் யாவும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” இன்றைய நாளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது எனவும் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாளில் இனிதான பிறந்தநாளினைக் கொண்டாடும் சுவிஸ் செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன் செல்வன்.ஈழதர்சனை அவரது பெற்றோர், அவரது மனைவி, அவரின் தம்பி யாழீஷன் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் தாயக உறவுகளோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துவதோடு அவரது பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் நடைபெறும் சமூகநல திட்டங்கள் மேலும் தொடரவும் பல்கிப் பெருகவும் வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

21.07.2022

இரண்டாம் கட்டமாக, சுவிஸ் ஈழதர்சன் பிறந்தநாளில் மேலும் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ)

சுவிஸ் ஈழதர்சனின் 25 வது பிறந்தநாளில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.