;
Athirady Tamil News

சேந்தமங்கலம் அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை…!!

0

சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துகாபட்டி கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி கோமதி. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் இருந்தனர். மூத்தமகன் கவுதம் (வயது 24). பட்டதாரியான இவர் கடந்த 9-ந் தேதி வீட்டை விட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

இதையடுத்து அவர்கள் கவுதமை கண்டுபிடித்து தரக்கோரி சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை சேந்தமங்கலம் அருகே மேதரமாதேவி கிராமத்தில் உள்ள கிணற்றில் வாலிபர் ஒருவரது பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, காணாமல் போன கவுதம் என்பதும், அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கவுதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.