;
Athirady Tamil News

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு!

0

கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து செல்கின்றது. நேற்றைய தினம் (12) மொத்தம் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என்ற மன நிலையில் பொது மக்களின் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளது.

பேரூந்துகளில் பயணம் செய்வோர், சந்தைகள், பொது இடங்களில் என மக்கள் முகக்கவசம் இல்லாமலும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதும் செயற்பட்டு வருகின்றனர். இதன் விளைவாகவே குறைந்திருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது மீண்ம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

எனவே பொது மக்கள் பொது இடங்களுக்கு பயணிக்கின்றது போது கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதார துறை மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.