;
Athirady Tamil News

தெற்கு அதிவேக வீதியில் வாகன நெரிசல்!!

0

தெற்கு அதிவேக வீதியின் மத்துகம நுழைவாயிலுக்கு அருகில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (21) மாலை பயணிகள் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.

பேருந்தின் இன்ஜினுக்குள் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த பயணிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.