;
Athirady Tamil News

யாழ். பல்கலையில் மேலும் இரண்டு பேராசிரியர்கள்!!

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகத் தரமுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று (27) சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவியுயர்வுக்காக விண்ணப்பித்த சிரேஷ்ட விரிவுரையாளர்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நியமங்களுக்கு அமைய மதிப்பீடுகளையும், நேர்முகத்தேர்வு – தெரிவுக் குழுவின் சிபார்சுகளையும் பரிசீலனை செய்த பேரவை மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், நரம்பியல் சிகிச்சை நிபுணருமான வைத்திய கலாநிதி அஜினி அரசரட்ணம் மருத்துவப் பேராசிரியராகவும், விஞ்ஞான பீடத்தின் விலங்கியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி கணபதி கஜபதி விலங்கியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்படுவதற்குப் ஒப்புதல் அளித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.