;
Athirady Tamil News

புத்தூர் பிரதேச சபை உறுப்பினர் , தனங்களப்பில் சடலமாக மீட்பு! (வீடியோ)

0

யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர், சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமைசடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்தூர் வடக்கு , ஆவரங்கால் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் சிவபாலன் என்பவரே அவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஆவரங்கால் பகுதியை சேர்ந்த குறித்த நபர் , தனங்களப்பு பகுதியில் தென்னம் தோட்டம் ஒன்றினை பராமரித்து வருவதுடன் தோட்டத்துடன் இணைந்த வீட்டில் வசித்தும் வந்துள்ளார்.

அந்நிலையில் கடந்த சில தினங்களாக அவரின் நடமாட்டத்தை அயலவர்கள் அவதானித்து இருந்த நிலையில் இன்றைய தினம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து , வீட்டுக்குள் பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இவர் சில தினங்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.