;
Athirady Tamil News

நாட்டை விட்டு பறந்து செல்ல தயாராகும் பல அரசியல்வாதிகள் !!

0

சுமார் 60 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருட இறுதி விடுமுறையை கழிப்பதற்கு வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர் என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடு செல்ல தயாராகும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து,அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் மற்றும் படிக்கும் தமது பிள்ளைகளைப் பார்க்க, விடுமுறை நாட்களில் அந்த நாடுகளுக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் மற்றுமொரு குழு, தமது விடுமுறையை நுவரெலியாவில் கழிக்க திட்டமிட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஜெனரல் ஹவுஸ் என்ற விடுதியில் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.