;
Athirady Tamil News

வவுனியா திருநாவற்குளம் ‘யங்லைன்’ விளையாட்டுக் கழகத்தின் அலங்கார நுழைவாயில் திறப்பு விழா.!! (படங்கள்)

0

வவுனியா திருநாவற்குளம் யங்லைன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் என். வினோபிரகாஸ் தலைமையில் ‘யங்லைன்’ விளையாட்டுக் கழகத்தின் அலங்கார நுழைவாயில் இன்றையதினம் (25) திறந்து வைக்கப்பட்டது.

அலங்கார நுழைவாயில் அமரர் யசோதரன் திவ்யா அவர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்தாரின் நிதி பங்காளிப்பிலும், நுழைவாயிலுக்கானா நீர் வடீகால் மதகு மற்றும் கிரவல் என்பன வவுனியா நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனின் நிதி மூலமும் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
‘யங்லைன்’ விளையாட்டுக் கழகத்தின் அலங்கார நுழைவாயில், அமரர் யசோதரன் திவ்யாவின் குடும்பத்தின் உறவுகளால் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் குருமன்காடு பிள்ளையார் ஆலய பிரதமகுரு திவாகரக்குருக்கள், வவுனியா நகர சபையின் உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சந்திரேஸ்வரன் ரவி, பண்டாரவன்னியன் சனசமூக நிலைய உப தலைவர் அன்னலதா தமிழ்ச்செல்வன், சிவன் ஆலய செயலாளர் பாலேந்திரன், பொருளாளர் விக்கினபாவானந்தன், நாகதம்பிரான் ஆலய உப செயலாளர் செந்தில்நாதன், உறுப்பினர் செல்வநாதன், கழகத்தின் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.