;
Athirady Tamil News

இங்கிலாந்தில் 10-ல் ஒருவருக்கு கொரோனா…!!

0

இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்று 1 லட்சத்து 22 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது.

3-வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

கடந்த 16-ந்தேதி 20 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இது படிப்படியாக அதிகரித்து தற்போது 10-ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க அந்நாட்டில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.