;
Athirady Tamil News

ரயில் கட்டண அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு !!

0

ரயில் கட்டணத்தை அதிகரிக்குமாறு ரயில்வே திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில்வே திணைக்களம் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருவதற்கும், நட்டத்தில் இயங்கும் நிறுவனமாக விமர்சிக்கப்படுவதற்கும் கட்டணங்கள் அதிகரிக்கப்படாததும் ஒரு காரணம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பஸ் கட்டண உயர்வால் ரயில்களை நோக்கிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதனால் ரயில் கட்டணத்தை பஸ் கட்டணத்துக்கு நிகராக வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.