;
Athirady Tamil News

28இல் பிம்ஸ்டெக் மாநாடு; செயலாளர் வந்தடைந்தார்!!

0

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (பிம்ஸ்டெக்) மாநாடு எதிர்வரும்28ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், அதன் செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல், இன்று மாலை இலங்கையை வந்தடைந்தார்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பூட்டான், தாய்லாந்து ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் வெளிவிவகார அமைச்சர்களும் நாட்டுக்கு வருகை தரவுள்ளதுடன், மியன்மாரின் வெளிவிவகார அமைச்சர் இந்த மாநாட்டில் இணைய வழியாக பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.