;
Athirady Tamil News

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் !!

0

இலங்கைக்கு பணம் அனுப்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பான யோசனையை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் வருடமொன்றுக்கு 100,000 டொலர்களை அனுப்பியவர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு முன்மொழிவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கான பிரேரணையை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக மேலும் பல வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.