;
Athirady Tamil News

இலங்கை மக்களுக்காக தொடரும் இந்திய அர்ப்பணிப்பு !!

0

இலங்கை மக்களுக்காக, இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புகளை செய்துவருகின்றது.

25 தொன்களுக்கும் அதிக நிறையுடையதும் 260மில்லியன் பெறுமதியானதுமான நன்கொடையான ஒருதொகுதி மருந்துப்பொருட்களை பதில் இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கொழும்பில் வைத்து இன்று (27) கையளித்தார்.

ஐ.என்.எஸ்.கரியால் கப்பலில் வந்தடைந்த இந்த உதவிப்பொருட்களில் இலங்கையில் உள்ள மீனவர்களின் பயன்பாட்டிற்கான மண்ணெண்ணெய்யும் உள்ளடங்கியுள்ளது. அடுத்துவரும் நாட்களில் இப்பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.