;
Athirady Tamil News

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நியமனம்!!

0

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் டி.ஜே.பலிஹக்காரவை மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முதல் 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீண்டும் கடமைக்குத் திரும்பும் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.