;
Athirady Tamil News

எனது நோக்கம் நிதியமைச்சர் அல்ல: எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ள பசில் !!

0

தனது தேசியப் பட்டியல் எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ள, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, “நிதி அமைச்சராக வேண்டும் என்பது எனது நோக்கமல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்துரைத்து கொண்டிருக்கின்றார்.

“எம்.பி பதவியைத் துறந்தாலும், ஆனாலும் அரசியல் செயற்பாடுகளை தொடர்வேன் . அரச நிர்வாகம் வேறு, அரசியல் வேறு. பாராளுமன்றுக்கு இப்போது நான் தேவையில்லையென நினைக்கிறேன்” என்றார்.

“நபர்களை மாற்றாது அரச பொறிமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதையே பலர் எதிர்பார்க்கின்றனர். எனினும் இதுவரை காலமாக நபர்களை மாற்றுவதையே முன்னெடுத்துள்ளோம். இனியாவது நபர்களை மாற்றாது பொறிமுறை மாற்றம் ஒன்று ஏற்படும் என எதிர்பார்க்கின்றேன்” என்றார்.

பசிலின் மனைவி அமெரிக்காவுக்கு பறந்தார் !!

பசிலின் இடத்திற்கு முன்னணி வர்த்தகர்?

பதவியை துறக்கிறார் பசில் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.