;
Athirady Tamil News

மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம்!! (படங்கள்)

0

புங்குடுதீவு மகா வித்தியாலய பழைய மாணவர்களின் நிதி அனுசரணையில் மாணவர்களுக்கான ”மதிய உணவுத் திட்டம்” ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இச்செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் மாகோ சின்னத்தம்பி கனகலிங்கம் ( முன்னாள் விரிவுரையாளர். பேராதனை பல்கலைக்கழக ம் ) அவர்கள் முன்னின்று உழைத்திருந்தார். இந்நிகழ்வில் ஓய்வுநிலை பேராசிரியர் கா. குகபாலன் , வேலணை கோட்ட கல்வி அதிகாரி சசிதரன், வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியில் மாணவர்களுக்கான நூல்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.