;
Athirady Tamil News

இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் வியாழேந்திரனின் சகோதரர் கைது – இன்று நீதிமன்றில் முன்னிலை..!!

0

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் ஒருங்கிணைப்புச் செயலாளராக உள்ள அவரது சகோதரரும் மற்றொருவரும் தொழிலதிபரிடமிருந்து இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்ட அவர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த இருவரும் காணி அபிவிருத்தி மற்றும் விற்பனைக்கு உதவுவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் 1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் கேட்டுள்ளனர்.

வர்த்தகர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், பணத்தைப் பெற்றுக்கொள்ள முற்பட்ட வேளையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.