;
Athirady Tamil News

நூபுர் சர்மாவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் – கொல்கத்தா காவல்துறை வெளியிட்டது..!!

0

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய டெல்லி பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா இறைதூதர் முகமது நபி பற்றி தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. கட்சி பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்ட நிலையில், நூபுர் சர்மா மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஆம்ஹெர்ஸ்ட் மற்றும் நர்கெல்டங்கா காவல் நிலையங்களில் நூபுர் சர்மா மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். அவருக்கு பலமுறை காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குற்ற வழக்கில் தேடப்படும் நபர், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் காவல்துறையினரால் சுற்றறிக்கை வெளியிடுவது வழக்கம். அதன் அடிப்படையில் நூபுர் சர்மாவுக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை லுக் அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னதாக தம் மீது பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.