;
Athirady Tamil News

டக்ளஸ் தேவானந்தாவினை பதவியில் இருந்து எதிர்காலத்தில் நீக்க நடவடிக்கை!! (வீடியோ)

0

எமது தொழிற்சங்கம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பாதிக்கப்பட்டுள்ளது.அவர் எம்மை ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்.இவரை பொய்யர் என்றே நாம் கருதுகின்றோம்.மிக விரைவில் பொது ஊழியர் சங்க போசகர் பதவியில் இருந்து அவரை எதிர்காலத்தில் நீக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம்இ அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

அரசியல் நடப்புகள் தொடர்பாக புதன்கிழமை மாலை கல்முனையில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு

டக்ளஸ் தேவானந்தா சம்பந்தன் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட ஏனைய கட்சி பிரதிநிதிகளாக இருக்கலாம் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தையும் மக்களையும் ஏமாற்றியவர்களாகவே கருதுகின்றோம்.

இப்போது இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும்.கொழும்பு மக்கள் புரட்சி போன்று வட கிழக்கிலும் ஒரு புரட்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.இதனூடாக புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.மேலும் குறிப்பாக எமது தொழிற்சங்கம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர் எம்மை ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்.இவரை பொய்யர் என்றே நாம் கருதுகின்றோம்.மிக விரைவில் பொது ஊழியர் சங்க போசகர் பதவியில் இருந்து எதிர்காலத்தில் நீக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.