;
Athirady Tamil News

தனியார் பேருந்து சேவைகள் தொடர்பான அறிவிப்பு !!

0

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் கிரமமான முறையில் கிடைக்கப் பெற்றால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தேவையான அளவு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தாங்கிய கப்பல்கள் இரண்டு நாட்டை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

இந்தநிலையில், முறையான முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறுமானால் மாத்திரம், குறிப்பாக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பயணிகளுக்கு ஏற்றவகையில், சீரான போக்குவர்த்து வசதியை வழங்க முடியும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.