;
Athirady Tamil News

கொழும்பில் இன்று ஏழு மணி நேரம் நீர்வெட்டு !!

0

நீர் விநியோக வலையமைப்பு மேம்பாட்டிற்கான திருத்தங்களை மேற்கொள்வதற்காக இன்று ஏழு மணி நேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இன்று (23) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பு 7, 8, 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.