;
Athirady Tamil News

வழங்கிய வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை – நாளை இலங்கை வங்கி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு !

0

வங்கி ஊழியர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவை (போனஸ்) வழங்க வேண்டும் என்றும் வலுயுறுத்தி
இலங்கையின் வங்கி ஊழியர்கள் ஒன்றிணைந்து அடையாளப் போராட்டம் ஒன்றை இன்று மதியம் முன்னெடுத்தனர்.

இலங்கையின் வங்கிகள் ஊழியர் சங்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் எ.சந்தனு தலைமையில் யாழ்ப்பாணம் அதி மேற்றரக் கிளை முன்றலில் இடம்பெற்றது

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட தலைவர் எ.சந்தனு –

புதிய ஆட்சியில் அரச ஊழியர்களுக்கு பல்வேறுபட்ட சலுகைகள் வ்ழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அது தற்போது கேள்விக்குறியாகிய நிலையே காணப்படுகின்றது.

இந்நிலையில் வருடாந்தம் 107 பில்லியன் நிதியை இலாபமாக நாட்டுக்கு ஈட்டிக்கொடுக்கும் எமது ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

இலங்கையின் வங்கிகள் அரசுக்கு செலுத்திய வரி 65 பில்லியன்.
ஊழியர்களின் உழைப்பிலிருந்து 35 வீதத்தை வரியாக அறவிடும் அரசு வங்கிக்காக அயராது உழைக்கும் ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்வதை ஏற்க முடியாது.

இதேனேரம் கடந்த வருடம் 107 பில்லியன் இலாபத்தை எமது வங்கிகள் அரசின் திறைசேரிக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

இவ்வாறிருக்க அதன் ஊழியர்கள் பல்வேறு இடர்பாடுகளுடன் போராடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே இருந்து வருகின்றனர்.

இன்னிலையில் நாம் எமக்கான நியாயம் கோரி கடந்த ஆண்டும் போராடியிருந்தோம். அதன் விழைவாக ஊக்குவிப்பு தொகை வழங்கப்படும் என நிதி அமைச்சர் வாக்குறுதி வழங்கியிருந்தார்.
ஆனால் இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை.

எனவே நாம் மீண்டும் போராட வீதிக்கு இறங்கியுள்ளோம்.

எமது போராடம் இன்று அடையாளப் போராட்டமாக இருந்தாலும் நாளை காலை 10.00 மணியிலிருந்து வங்கி நடவடிக்கைகளை இடை நிறுத்தி போராட்டம் செய்யவுள்ளோம்.

அதன் பின்னர் அடுத்த மாதம் 5 ஆம் திகதி முழுமையான போராட்டத்தை தீர்வு கிடைக்கும் வரை முன்னெடுக்க ஏற்பாடு செய்யவுள்ளோம் என்றும் தெரிவித்திருந்தமை குதிப்பிடத்தக்கது.

இதேவேளை நிதி அமைச்சர் வழங்கிய வாக்குறுதி எங்கே, இலங்கை வங்கியின் பணிப்பாளர் சபை அங்கீகரித்த ஊக்குவிப்பு கொடுப்பனவை உடனடியாக வழங்கு, ஊழியர்களுக்கு நியாயம் வழங்கு என்ற போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கோசங்களையும் எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.