;
Athirady Tamil News

’சேவையில் ஈடுபடாத தனியார் பேருந்துகளின் அனுமதிப் பத்திரம் இரத்து’ !!

0

எரிபொருளை பெற்றுக்கொண்டு சேவையில் ஈடுபடாத தனியார் பேருந்து உரிமையாளர்களின் போக்குவரத்து அனுமதி பத்திரத்தினை இரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பயணிகள் சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களின் வாயிலாக டீசல் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

எனினும் டீசலை பெற்றுக்கொண்டு சில தனியார் பஸ்கள் இதுவரை சேவையில் ஈடுபடவில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சேவையில் ஈடுபடாதவர்களின் போக்குவரத்து அனுமதி பத்திரம் விரைவில் இரத்து செய்யப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்த்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.