131 கொரோனா தொற்றாளார்கள் அடையாளம் !!
![](https://www.athirady.com/wp-content/uploads/2022/07/1616678975-coro-02-1-650x430.jpg)
நாட்டில் தற்போது நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், நேற்றைய தினம் 131 கொரோனா தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளாந்த கொரோனா தொற்றாளர்களுடன் ஒப்பிடும் போது தற்போது கொரோனா தொற்றாளர்களின் வேகம் அதிகரித்து வருவதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.