;
Athirady Tamil News

சென்னையில் சாலையோரங்களில் கேட்பாரற்ற வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கும் அவலம்..!!

0

சென்னையில் சாலை யோரங்களில் கேட்பாரற்று நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சென்னையில் மாநகர சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே தேவையற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் காலை, மாலை என எப்போதும் சாலைகளில் நெரிசல் ஏற்படுகின்றன. இதற்கு சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்கள் மட்டுமல்ல சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களும் ஒரு காரணம் ஆகும். சென்னையில் ஒவ்வொரு நாளும் புதிதாக சுமார் 2000 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. சென்னையில் சுமார் 50 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான வாகனங்கள் சாலையிலும், தெருவிலும் நிறுத்தப்பட்டு விடுகின்றன. பள்ளி, கல்லூரிகள் பஸ்கள் தனியார் பஸ்கள், வேன்கள் சாலையில் நிறுத்தப்படுகின்றன. கால் டாக்சிகள், ஆட்டோக்கள் விரைவாக சேவை தரும் போட்டியில் சாலைகளில் நீண்ட வரிசையில் நிறுத்தப் படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. மெட்ரோ ரெயில் பணிகள் நடக்க ஆரம்பித்ததும் பல இடங்களில் வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாமல் போய்விட்டன. அதனால் முக்கிய இடங்களுக்கு வாகனங்களில் செல்பவர்கள் படும் அவதிக்கு அளவே இல்லை. சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல், சாலையோர, தெருவோர வாகன ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் கண்டும் காணாதது போல உள்ளனர். இதனை முறைப்படுத்தினால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.சாலை ஓரங்களில் தேவையற்ற, வீணாக கிடக்கும் பழுதடைந்த வாகனங்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.