;
Athirady Tamil News

மத்தியப் பிரதேச தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து- 10 பேர் உயிரிழப்பு..!!

0

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து முதலில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தீ பற்றி பிறகு மற்ற பகுதிகளுக்கு பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும், தீயில் சிக்கி படுகாயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.