;
Athirady Tamil News

பருத்தித்துறை மீனவர்கள் தமிழகத்தில் கரையொதுங்கினர்!!

0

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளனர்.

பருத்தித்துறை இன்ப சிட்டி பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் மற்றும் பலாலியை சேர்ந்த ஜெசிகரன் ஆகிய இருவரே கரையொதுங்கியுள்ளனர்.

விசாரணைகளின் போது , தாம் கடந்த 31ஆம் திகதி மாலை பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டதாகவும் , தமது படகு கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்ததால் தாம் இருவரும் நீந்தி தமிழக கரையோரத்தை அடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருவர் தொடர்பிலும் தமிழக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.