;
Athirady Tamil News

முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி காலமானார்..!!

0

அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகளாக தமிழ் செய்திப் பிரிவில் பணியாற்றியவர் சரோஜ் நாராயணசாமி. தலைநகர் டெல்லியில் தமிழ் பிரிவில் பணியாற்றிய இவர் 1995ல் ஓய்வு பெற்றார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. இவரது கம்பீரமான குரலுக்காகவும், உச்சரிப்புக்காகவும் ஏராளமான நேயர்களைப் பெற்றவர். இந்நிலையில், மும்பையில் வசித்து வந்த சரோஜ் நாராயண சுவாமி, வயது முதுமை காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.