;
Athirady Tamil News

தாறுமாறாக ஓடிய லாரி வீட்டுக்குள் பாய்ந்தது- 4 பேர் பலியான சோகம்..!!

0

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் தாறுமாறாக ஓடிய லாரி ஒன்று, சாலையோரம் உள்ள வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. குராவளி காவல் சரகத்திற்கு உட்பட்ட கிரியா பீப்பால் கிராமத்தின் அருகே நேற்று இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லாரி மோதியதில் வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர், அவரது மனைவி, லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.