;
Athirady Tamil News

50 பேர் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அவசர செய்தி!!

0

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது அலரிமாளிகைக்குள் நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 50 சந்தேகநபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் 011-2421867, 076-3477342 அல்லது 1997 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.