;
Athirady Tamil News

கோழி இறைச்சிக்கும் வருகின்றது கட்டுப்பாட்டு விலை!!

0

கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதுடன், இது தொடர்பான இறுதித் தீர்மானம் இந்த வாரத்தில் எட்டப்படும் என வணிக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கோழிப் பண்ணையாளர்கள் விலையைக் குறைக்க ஒப்புக்கொண்டால், கட்டுப்பாட்டு விலை அவசியமில்லை என்று அவர் கூறினார்.

இதேவேளை, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முட்டைக்கான ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.