;
Athirady Tamil News

கேரளா: ஆதிசங்கரர் ஜென்மபூமியில் தரிசனம் செய்த பிரதமர் மோடி..!!

0

பிரதமர் மோடி கேரளாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்த ஊரான காலடி கிராமம் உள்ளது.

இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா வந்தார்.

மாலையில் காலடி கிராமத்திற்கு வந்து சேர்ந்த அவர், ஆதிசங்கரர் ஜென்மபூமியில் தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி மரியாதை வழங்கிய கோவில் நிர்வாகிகள், ஆதி சங்கரர் திருவுருவ சிலையை பரிசாக வழங்கினர்.

மேலும், ருத்ராட்ச மாலையும் அணிவித்தனர். நாளை கொச்சி துறைமுகத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.