;
Athirady Tamil News

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது- கல்முனை விசேட அதிரடிப்படையினரால் விசாரணை முன்னெடுப்பு!!

0

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து செவ்வாய்க்கிழமை(13) இரவு நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் சந்தேக நபர் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் நிந்தவூர் 9 பகுதியை சேரந்த 36 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 3 கிராம் 600 மில்லிகிராம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம் டயஸ் தலைமையிலான பொலிஸ் சார்ஜன்ட்களான பண்டார (13443) , வீரகோன் (33354), ராஜபக்ச (24812), பொலிஸ் கன்டபிள்களான சந்திரரட்ண (90669), நிமேஸ்(90699) , சாரதி குணபால (19401)அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர்கள் சான்று பொருட்களுடன் நிந்தவூர் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.