;
Athirady Tamil News

முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் கசிப்புடன் கைது!!

0

பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற உத்தியோகஸ்தர் கசிப்பினை உடைமையில் வைத்திருப்பதாக யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டதுடன் , அவரிடம் இருந்து ஒரு தொகை கசிப்பும் மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.

மேலதிக நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.