;
Athirady Tamil News

ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்- மாநில அரசுகளுக்கு மத்திய மந்திரி வலியுறுத்தல்..!!

0

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்களின் வருடாந்திர மாநாடு டெல்லியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பணியாளர்துறை மந்திரி ஜிதேந்திர சிங், நமது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பில் மத்திய பணி என்பது ஒரு பகுதியாகும் என்று தெரிவித்தார்.

மாநில அரசுகள், மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தினார். மேலாண்மை தொடர்பான வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். அகில இந்திய பணி அதிகாரி என்பவர் மாநில, மத்திய அரசுகளை இணைக்கம் முக்கியமான ஒருங்கிணைப்பாளர் என்றும் தெரிவித்தார்.

ஐ.ஏ.எஸ் உள்பட இதர அகில இந்திய பணி அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்ப வகை செய்யுமாறு மாநில அரசுகளை அவர் வலியுறுத்தினார். நடப்பு ஆண்டில், குடிமைப்பணி தேர்வு மூலம் 180 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு வெற்றிகரமாக பணிகளை ஒதுக்கியுள்ளது என்றார். மாநிலப் பணிகளில் இருந்து 434 காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊழலில் சிக்குவோர் மற்றும் திறமையற்ற அதிகாரிகளை களையெடுக்க மாநில அரசுகள் உதவுமாறும் மந்திரி ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.