;
Athirady Tamil News

சோனியா காந்தி ஆரோக்கியமாக உள்ளார்; சித்தராமையா பேட்டி..!!

0

மைசூருவில் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- பாதயாத்திரையில் பங்கேற்க சோனியா காந்தி வந்துள்ளார். மோசமான வானிலை காரணமாக குடகு மாவட்டத்திற்கு செல்ல முடியாததால், மைசூருவிலேயே 2 நாட்கள் ஓய்வெடுக்க உள்ளார். அவர் உடல் ஆரோக்கியமாக உள்ளார். உடல் நலம் கருதி சோனியா காந்தியை யாரும் சந்தித்து பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். காரில் வரும் போது மட்டுமே சோனியா காந்தியுடன் பேசினேன். அவர் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு சென்று சந்தித்து பேசவில்லை. உடல் நிலையை கருத்தில் கொண்டு வருகிற 6-ந் தேதி பாதயாத்திரையில் சிறிது நேரம் பங்கேற்று விட்டு சோனியா காந்தி டெல்லி புறப்பட்டு செல்வார். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.