;
Athirady Tamil News

அர்ஜுன மகேந்திரனுடன் சந்திப்பு; மறுத்தார் ரணில்!!

0

பிணைமுறி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை, ஜப்பானில் இருந்து இலங்கை வரும் வழியில் ஜனாதிபதி சந்தித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் முன்வைத்த குற்றச்சாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் நிராகரித்துள்ளார்.

‘ஜனாதிபதி ஜப்பானில் இருந்து இலங்கை திரும்பும் வழியில் சிங்கப்பூர் அமைச்சர் ஒருவரைச் சந்தித்ததாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர் உண்மையில் மகேந்திரனைச் சந்தித்து அவருடன் மதிய உணவு உட்கொண்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது’ என மரிக்கார் கூறினார்.

இதனை மறுத்த ஜனாதிபதி ரணில், ‘மகேந்திரனுடன் நான் சாப்பிடவில்லை. சிங்கப்பூர் அமைச்சருடன் காலை உணவை மட்டும் சாப்பிட்டேன், சிங்கப்பூரில் இருந்து கொழும்பு செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்தபோது மதிய உணவு சாப்பிட்டேன். அநத மெனுவை எம்.பி.யிடம் காட்டலாம்” என்றார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் மற்றுமொரு அரகல (போராட்டம்) உருவாக உள்ளது என்றார். ‘இதனையே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவும் தெரிவிக்கின்றார். பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறாரா என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது’ என ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மரிக்கார், ‘ஹிருணிகா பிரேமச்சந்திரவை நான் ஒருபோதும் பின்பற்றமாட்டேன் என ஜனாதிபதிக்கு உறுதியளிக்க விரும்புகின்றேன்’ என்றார்.

அதற்கு, ‘நீங்கள் ஹிருணிகாவைப் பின்பற்றவில்லை என்றால், என்னைப் பின்தொடர்ந்து எனக்காக வேலை செய்யுங்கள்’ என்று ஜனாதிபதி பதிலளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.