;
Athirady Tamil News

இராணுவத்தைப் பயன்படுத்தினால் மோசமான பின்விளைவுகள் வரும் !!

0

நாட்டில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முதலில் மக்களின் விருப்பதைப் பெற வேண்டும். அதனை விடுத்து கமல் குணர்தவனவின் இராணுவத்தைப் பயன்படுத்தி பலவந்தமாக மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முயற்சித்தால், நினைத்துப் பார்க்க முடியாத பின்விளைவுகள் ஏற்படுமென அரசாங்க நிதிப் பற்றியக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா எம்.பி தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கொண்டுவரப்பட்ட வரி திருத்தங்களை தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் கிளித்தெறிந்ததோடு, வரியை அறவிடுவதற்குப் பதிலாக நாணயத்தாள்களை அச்சிட்டு செலவு செய்து பைத்தியக்காரத்தனமாக நடந்துக்கொண்டது எனவும் தெரிவித்தார்.

எனினும், தற்போது மீள வரிகளை அதிகளவில் அறவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அப்படியென்றால் எதற்காக ஆட்சிக்கு வந்ததும் வரிகளை குறைக்க வேண்டும் எனவும் ஹர்ஷ கேள்வி எழுப்பினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.