;
Athirady Tamil News

வவுனியாவில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடன் நீக்கு என கோரி கவனயீர்ப்பு போராட்டம்!! (PHOTOS)

0

தமிழர் சமூக ஐனநாயகக்கட்சியினரினால் பயங்கரவாத தடைச்சட்டத்தினன உடன் நீக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா பழைய பேரூந்து நிலைய முன்றலில் இன்று காலை 10.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது

தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியின் வன்னி பிராந்தியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இவ் கவனயீரப்பு போராட்டத்தில் அரசே மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை முழுமைப்படுத்து , அரசே மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடாத்து , தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் – நில – வீட்டு உரிமையை உறுதி செய் , வானத்தில் வட்டமிடும் விலைவாசியை – மக்களுக்கு கிட்டவாக கொண்டு வா ,கிழக்கு வடக்கில் மத இனவாத நோக்கிலான தொல்பொருள் தேடுதல்களை உடனடியாக நிறுத்து போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

30நிமிடங்கள் முன்னெடுக்கப்பட்ட இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் 50க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.