;
Athirady Tamil News

காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 2 பேர் உயிரிழப்பு..!!

0

டெல்லி நரேலா தொழிற்சாலை பகுதியில் காலணி தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இதில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், தொழிற்சாலைக்குள் பணியில் இருந்த இரண்டு பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலர் உள்ளே சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தொழிற்சாலைக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 2 பேரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயன்று வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.