;
Athirady Tamil News

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் உயிரிழப்பு!!

0

யாழ்ப்பாணம் கோண்டாவில் உப்புமட பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோண்டாவில் மேற்கை சேர்ந்த எஸ். விக்னேஸ்வரன் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த வேளை மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த பெண் மோதி விபத்துக்கு உள்ளானதில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.