;
Athirady Tamil News

மங்களூரு குண்டுவெடிப்பு: புதிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது..!!

0

மங்களூரு வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநில போலீசார் மற்றும் என்.ஜ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தீவிரவாத தாக்குதல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு காயம் அடைந்து உள்ள ஷாரிக் தீவிரவாத இயக்கத்தில் தொடர்புடையவர் என போலீசார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு ஷாரிக் பை ஒன்றை தனது தோளில் சுமந்து செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் பேருந்து நிலையம் அருகே இருந்த கடையில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த பையில் குக்கர் வெடிகுண்டு இருந்ததா? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.