;
Athirady Tamil News

விடுதலைப்புலிகளின் தலைவரின் பூர்விக வீட்டுக்கு பாதுகாப்பு!!

0

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் , வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்விக வீட்டினை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் இராணுவத்தினர் , பொலிஸார் , புலனாய்வு பிரிவினர் பெருமளவில் குவிந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உள்ள மாவீரர் நினைவிடத்தினை சிரமதானம் மூலம் துப்பரவு செய்ய இராணுவத்தினர் தடை விதித்தனர்.

இராணுவத்தின் தடைகளை மீறி துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது , துப்பரவு பணிகளை மேற்கொண்டவர்களை இராணுவத்தினர் ஒளிப்படங்கள் எடுத்து , அச்சுறுத்தும் பாணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.