;
Athirady Tamil News

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில மணித்தியாலங்களில்!!

0

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் சில மணித்தியாலங்களில் வெளியாகவுள்ளன.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்தார்.

2021, மே 23 முதல் ஜூன் 01 வரை நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை மையங்களில் நடைபெற்ற இந்தப் பரீட்சைக்கு மொத்தமாக 517,496 பரீட்சார்த்திகள் தோற்றினர்.

அவர்களில் 407,129 பேர் பாடசாலை மாணவர்கள் மற்றும் 110,367 பேர் தனிப்பட்ட பரீட்சாத்திகளாவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.