;
Athirady Tamil News

இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்!!

0

பெய்து வரும் கடும் மழையால் இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இந்த மண்சரிவு அபாயம் தோன்றியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதன்காரணமாக அந்த பிரதேசங்களின் மலைப்பாங்கான மற்றும் சரிவான பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படுமிடத்து அவதானமாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.