;
Athirady Tamil News

எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் எழுச்சியாக கொண்டாட்டம் !!! (படங்கள்)

0

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்று ஆறாவது பிறந்த தினம் நேற்று(17) மாலை யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தை வளாகத்தில் அமரர் கோப்பாய் சுந்தரலிங்கத்தினால் சொந்த நிதியில் அமைத்த எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் தீப ஆராதனை காட்டப்பட்டும் மரியாதை செலுத்தி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் பகுதியை சேர்ந்த எம்.ஜி ஆரின் தீவிர இரசிகனான அமரர் சுந்தரலிங்கத்தின் துணைவியார் திருமதி. இலட்சுமி ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் திரு.எம்.கே சிவாஜிலிங்கம் , வலி – கிழக்கு பிரதேச சபை தவிசாளர் திரு.தியாகராஜா நிரோஷ்,வலி – கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் திரு.ராசேந்திரம் செல்வராஜா, கோப்பாய் சுந்தரலிங்கம் குடும்பத்தினர் மற்றும் கல்வியங்காட்டு சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் தென்னங்கன்று வழங்கி கொண்டாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.